ரூ.4,433 கோடிக்கு புண்ணாக்கு ஏற்றுமதி


ரூ.4,433 கோடிக்கு புண்ணாக்கு ஏற்றுமதி
x
தினத்தந்தி 31 Jan 2020 11:32 AM GMT (Updated: 31 Jan 2020 11:32 AM GMT)

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் ரூ.4,433 கோடிக்கு புண்ணாக்கு ஏற்றுமதி ஆகி இருக்கிறது.

டப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் ரூ.4,433 கோடிக்கு புண்ணாக்கு ஏற்றுமதி ஆகி இருக்கிறது.

31 சதவீதம் உயர்வு

கடந்த 2018-19-நிதி ஆண்டில் ரூ.6,222 கோடிக்கு புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.4,762 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பு அடிப்படையில் ஏற்றுமதி 31 சதவீதம் உயர்ந்தது. இதே காலத்தில் அளவு அடிப்படையில் அது 6 சதவீதம் உயர்ந்து 32 லட்சம் டன்னாக இருந்தது.

இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் (2019-20), டிசம்பர் வரையிலான முதல் 9 மாதங் களில் புண்ணாக்கு ஏற்றுமதி 39 சதவீதம் சரிவடைந்து ரூ.4,433 கோடியாக இருக் கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.7,242 கோடியாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டும் புண்ணாக்கு ஏற்றுமதி 60 சதவீதம் குறைந்து ரூ.549 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.1,385 கோடியாக இருந்தது.

இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவல்படி நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் வரையிலான முதல் 9 மாதங்களில் புண்ணாக்கு ஏற்றுமதி, அளவு அடிப்படையில் 25 சதவீதம் சரிவடைந்து 18.02 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 24.11 லட்சம் டன்னாக இருந்தது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் புண்ணாக்கு ஏற்றுமதி 67,562 டன்னாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 3.25 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 79 சதவீதம் குறைந்து இருக்கிறது.

சோயாபீன்

பருத்தி விதை, எள், கடுகு, சோயாபீன் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வியட்நாம், தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியாவில் இருந்து புண்ணாக்கை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பிய நாடுகளுக்கும் கூட குறிப்பிடத்தக்க அளவிற்கு புண்ணாக்கு ஏற்றுமதி ஆகிறது.

Next Story