ஜனவரி மாதத்தில் பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பு ரூ.27.85 லட்சம் கோடியாக அதிகரிப்பு


ஜனவரி மாதத்தில் பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பு ரூ.27.85 லட்சம் கோடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Feb 2020 11:27 AM GMT (Updated: 11 Feb 2020 11:27 AM GMT)

பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.27.85 லட்சம் கோடியாக அதிகரித் துள்ளது.

மும்பை

பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.27.85 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

நிர்வகிக்கும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

பரஸ்பர நிதி துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் இத்துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

சாதனை அளவு

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் பரஸ்பர நிதித் துறையின் சொத்து மதிப்பு ரூ.27.05 லட்சம் கோடி என்ற புதிய எல்லையை தொட்டு இருந்தது. டிசம்பர் மாதத்தில் அது 2 சதவீதம் குறைந்து ரூ.26.54 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பாண்டு ஜனவரியில் ரூ.27.85 லட்சம் கோடி என்ற புதிய சாதனை அளவை எட்டி இருக்கிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என ஏ.எம்.எப்.ஐ. அமைப்பு கூறி உள்ளது. இதே காலத்தில் இத்துறையில் 10 கோடி முதலீட்டாளர்கள் இருப்பார்கள் என அந்த அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. முதலீட்டாளர் கணக்கு களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும்.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் முதலீட்டாளர் கணக்குகள் 1.11 கோடி உயர்ந்தது. இதனையடுத்து கணக்கு களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8.24 கோடியாக அதிகரித்தது. 2019 டிசம்பர் இறுதியில் மொத்த கணக்குகள் 8.71 கோடியை எட்டி உள்ளது. 2018 டிசம்பர் இறுதியில் அது 8.03 கோடியாக இருந்தது. ஆக, ஓராண்டுக் காலத்தில் கணக்குகளின் எண்ணிக்கை 68 லட்சம் உயர்ந்து ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் தற்போது 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி வேண்டி செபி அமைப்பிடம் விண்ணப் பித்து வருகின்றன. எனவே இனி வரும் மாதங்களிலும் முதலீட்டாளர் கணக் குகள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

30 பெரிய நகரங்கள்

புதுடெல்லி (என்.சி.ஆர். உள்பட), மும்பை (தானே, நவி மும்பை உள்பட), கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பரோடா, சண்டிகர், ஐதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பன்ஜிம், பூனா, சூரத் உள்ளிட்ட 30 பெரிய நகரங்கள் நீங்கலாக மற்ற சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி இத்துறை நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இதன் பலனாக பரஸ்பர நிதி துறையின் மொத்த சொத்து மதிப்பில் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் பங்கு அதிகரித்து வருகிறது. எனினும் இன்றைய நிலவரப்படி 85 சதவீதத்திற்கும் அதிகமான முதலீட் டாளர்கள் 30 பெரிய நகரங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சிறிய, நடுத்தர நகரங்களைச் சேர்ந்தவர்களின் பங்கு 15 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.

புதிய முதலீட்டாளர்கள்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும் பரஸ்பர நிதி திட்டங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story