பங்குச்சந்தை துளிகள் : பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு


பங்குச்சந்தை துளிகள் : பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு
x
தினத்தந்தி 19 March 2020 10:21 AM GMT (Updated: 19 March 2020 10:21 AM GMT)

பிர்லா சாப்ட் நிறுவன பங்குகளை வாங்கலாம் என எலாரா கேப்பிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என நோமுரா நிறுவனம் கூறி உள்ளது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,770-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை 3.9 சதவீதம் சரிந்து ரூ.968.85-ஆக இருந்தது.

* நெஸ்கோ பங்குகளில் முதலீடு செய்யலாம் என நிர்மல்பாங் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.937-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.487.80-ல் முடிவுற்றது. கடந்த செவ்வாய்க் கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 8.94 சதவீத சரிவாகும்.

* பிர்லா சாப்ட் நிறுவன பங்குகளை வாங்கலாம் என எலாரா கேப்பிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இதற்கான எதிர்கால இலக்கை ரூ.91-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.60.25ஆக இருந்தது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 9.33 சதவீத இறக்கமாகும்.

* பார்தி இன்ப்ராடெல் நிறுவன பங்குகளை விற்றுவிடலாம் என ஈடல்வைஸ் நிறுவனம் கூறுகிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.170-ஆக குறைத்து இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இந்தப் பங்கு விலை 22.63 சதவீதம் சரிவடைந்து ரூ.150.15-ஆக இருந்தது.

* என்.டி.பி.சி. பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற் கான எதிர்கால இலக்கை ரூ.165-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், புதன்கிழமை வர்த்தகத்தில் இந்தப் பங்கின் விலை 9.14 சதவீதம் குறைந்து ரூ.1803.10-ல் முடிவுற்றது.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Next Story