பங்குச்சந்தை துளிகள் : பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு


பங்குச்சந்தை துளிகள் : பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு
x
தினத்தந்தி 20 March 2020 9:58 AM GMT (Updated: 20 March 2020 9:58 AM GMT)

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஈடல்வைஸ் நிறுவனம் கூறுகிறது.

* என்டியூரன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கூறி உள்ளது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,025-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.709.20-ஆக இருந்தது.

* ஐசிஐசிஐ வங்கி பங்குகளை வாங்கலாம் என எம்கே குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இதற்கான எதிர்கால இலக்கை ரூ.600-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.339.15-ஆக இருந்தது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 4.73 சதவீத இறக்கமாகும்.

* கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஈடல்வைஸ் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.580-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.483.25-ல் முடிவுற்றது. புதன்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 6.64 சதவீத சரிவாகும்.

* ஏஷியன் பெயிண்ட் நிறுவன பங்குகளை வாங்கலாம் என ஈடல்வைஸ் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,850-ஆக நிர்ணயம் செய்து இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் இந்தப் பங்கு விலை 0.84 சதவீதம் சரிந்து ரூ.1,603- ஆக இருந்தது.

* கன்டெய்னர் கார்ப்பரேஷன் பங்குகளில் முதலீடு செய்யலாம் என கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.400-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்தப் பங்கின் விலை 4.18 சதவீதம் குறைந்து ரூ.285.65-ல் முடிவுற்றது.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Next Story