காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலத்தில் 5.2 ஆண்டுகள் குறைகிறது ஆய்வில் தகவல்


காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலத்தில் 5.2 ஆண்டுகள் குறைகிறது ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 29 July 2020 7:03 AM GMT (Updated: 29 July 2020 7:03 AM GMT)

இந்தியாவில் காற்று மாசுபாடு இந்தியர்களின் ஆயுட்காலத்தில் 5.2 ஆண்டுகளை குறைக்கிறது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

புதுடெல்லி: 

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுக்கு இணங்க மாசு குறைக்கப்பட்டால், காற்று மாசுபாடு சராசரி இந்தியர்களின் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் குறைத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலானது பிஎம்2.5 (விட்டம் 2.5 மைக்ரானுக்கும் குறைவான துகள்கள்) ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரானுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் பிஎம்10 (10 மைக்ரானுக்கு குறைவான விட்டம் கொண்ட பொருள்) ஒரு கன மீட்டருக்கு 20 மைக்ரானுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

இந்தியாவில், 2018 ஆம் ஆண்டில் சராசரி பிஎம் 2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 63 மைக்ரான் ஆகும்.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் (ஈபிஐசி) தயாரித்த காற்றின் தர ஆயுள் குறியீட்டின் (ஈக்யூஐ) புதிய பகுப்பாய்வில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி மாசுபாட்டைக் குறைத்தால் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் காலப்போக்கில் காற்றின் தரத்தில் துகள் மாசுபாடு கூர்மையாக அதிகரித்தது. 1998 முதல், சராசரி ஆண்டு துகள் மாசுபாடு 42 சதவீதம் அதிகரித்துள்ளது, அந்த ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1.8 ஆண்டுகள் குறைந்தன.

இந்தியாவின் மக்கள்தொகையில் கால் பகுதியினர் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத காற்று மாசுபாட்டுக்கு ஆளாகின்றனர், வட இந்தியாவில் வசிக்கும் 24.8 கோடி மக்கள் இதே மாசு அளவு தொடர்ந்தால் 8 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை  இழக்க நேரிடும்.

லக்னோ மிக உயர்ந்த மாசுபாட்டைக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டது, உலகசுகாதார அமைப்பு வழிகாட்டுதலை விட மாசு 11 மடங்கு அதிகம். லக்னோவில் வசிப்பவர்கள் இதே மாசுபாடு தொடர்ந்தால் 10.3 ஆண்டுகள் ஆயுட்காலத்தை இழக்க நேரிடும்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுக்கு இணங்க மாசு குறைக்கப்பட்டால் டெல்லியில் வசிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் 9.4 ஆண்டுகள் அதிகம் வாழலாம். மாசுபாடு இந்தியாவின் தேசிய தரத்தை பூர்த்தி செய்தால் 6.5 ஆண்டுகள் அதிகம்  வாழலாம்.

பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் அதிகமாக 7 ஆண்டுகளும்,அரியானா மாநில மக்கள் 8 ஆண்டுகளும் அதிகமாக வாழலாம்.

இந்தியாவின் 140 கோடி  மக்கள் உலக சுகாதார அமைப்பின் சராசரி காற்று மாசுபாடு வழிகாட்டுதலை மீறிய பகுதிகளில் வாழ்கின்றனர். இந்தியாவின் சொந்த சாராசரி காற்றின் தரத்தை மீறிய பகுதிகளில் 84 சதவீதம் பேர் வாழ்கின்றனர்.

உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்ட நான்கு நாடுகளான வங்காள தேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் மிகவும் மாசுபட்டுள்ளன, வட இந்தியா தெற்காசியாவின் மிகவும் மாசுபட்ட பகுதியாக வளர்ந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில், தொழில்மயமாக்கல், பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவை இந்த நாடுகளில் எரிசக்தி தேவையை உயர்த்துவதற்கு வழிவகுத்து உள்ளன. இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சேர்த்து, சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

வங்காள தேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து எடுக்கும் மின்சாரம் 1998 முதல் 2017 வரை மூன்று மடங்காக அதிகரித்தது. பயிர் எரித்தல், செங்கல் சூளைகள் மற்றும் பிற தொழில்துறை நடவடிக்கைகளும் இப்பகுதியில்- மாசுபாட்டை அதிகரிப்பதற்கு பங்களித்தன என்று அறிக்கை கூறியுள்ளது.


Next Story