எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...?


எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...?
x
தினத்தந்தி 23 Sep 2020 3:53 PM GMT (Updated: 23 Sep 2020 3:53 PM GMT)

விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை. எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...?

புதுடெல்லி

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை உரையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கும் சீன அதிபர் ஜிக்கும் இடையில் வேறுபாடு அதிகமாக இல்லை ஆனால் சீனத் தலைவரே உண்மையான சர்வாதிகாரி

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஆற்றிய (யு.என்.ஜி.ஏ) உரையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், "சமாதானம், வளர்ச்சி, சமத்துவம், நீதி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் மதிப்புகளை நிலைநிறுத்த எங்களுடன் கைகோர்க்க வேண்டும்.

சீனா உலகளாவிய அமைதியைக் கட்டியெழுப்புபவராகவும், உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிப்பாளராகவும், சர்வதேச ஒழுங்கைப் பாதுகாப்பவராகவும் தொடர்ந்து பணியாற்ற விரும்புபுகிறது.

"சீனா உலகின் மிகப்பெரிய வளரும் நாடு, அமைதியான, திறந்த, கூட்டுறவு மற்றும் பொதுவான வளர்ச்சிக்கு உறுதியளித்த நாடு. நாங்கள் ஒருபோதும் மேலாதிக்கத்தையோ, விரிவாக்கத்தையோ, செல்வாக்கையோ  தேட மாட்டோம். எந்தவொரு நாட்டினருடனும் பனிப்போர் நடத்த அல்லது போரிட எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை என்று ஜின்பிங் தனது உரையின் போது கூறினார்.

ஆனால் சீனா அதிபரின் பேச்சுக்கு எத்ராக சீனா தனது இராணுவத்தை விரிவுபடுத்தி, தென் சீனக் கடலில், தைவான் நீரிணையில், மற்றும் இந்தியாவின் நாட்டின் இமயமலை எல்லையில் பெரிய முறையில் ஆக்கிரமிப்பு நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்றை அவர் மறந்துவிட்டார், இப்போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்களைக் கொன்றுள்ளது.கொரோனா உலகை நாசமாக்கியுள்ளது, உலகப் பொருளாதாரத்தை முடக்கி உள்ளது.

சீனா 18 நாடுகளுடன் பிராந்திய மோதல்களைக் கொண்டுள்ளது, மேலும் 14 நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

சீனாவிற்கு ஜப்பானுடன் ஒரு பிராந்திய தகராறு உள்ளது, ஏனெனில் அது செங்காகு தீவுகள் மற்றும் ரியுக்யு தீவு தன்னுடையது என்று கூறுகிறது. பாரசெல் தீவுகள் மற்றும் ஸ்ப்ராட்லி தீவுகள் உட்பட வியட்நாமின் பெரும் பகுதிகளையும் சீனா தனது என கூறுகிறது.

இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தையும், லடாக் பிரதேசத்தையும் சீனா தனது என கூறுகிறது. இரு நாடுகளும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு - எல்லையில் மோதல்களில் ஈடுபட்டுள்ளன.

நேபாள நிலத்தில் சீனா 11 கட்டிடங்களை கட்டியுள்ளது.

வட கொரியாவின் பேக்டு மலைகள் மற்றும் ஜியாண்டாவோவையும் சீனா தன்னுடையது என்று  கூறுகிறது. சீனாவுக்கு பிலிப்பைன்சுடனும் 160,000 சதுர கி.மீ. நில மோதல்கள் உள்ளன. 

தென் சீனக் கடலில் சீனாவுடன் சிங்கப்பூரும் போராடுகிறது.

கிழக்கு சீனக் கடலில், அது தென் கொரியாவுடன் போராடுகிறது. பூட்டானின் சில பகுதிகள், தைவான் அனைத்தும், லாவோஸின் பெரிய பகுதிகள் மற்றும் புருனேயின் சில பகுதிகள், தஜிகிஸ்தான் மற்றும் கம்போடியா ஆகியவற்றுடன் சீனா மோதல்போக்கை கடைபிடிக்கிறது.

இதென் சீனக் கடலில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவையும் எதிர்த்துப் போராடுகிறது. சீனாவும் மங்கோலியா அனைத்தையும் உரிமை கோருகிறது. விரிவாக்கவாதி அல்ல அமைதியை நேசிக்கும் சீனாவின் உண்மையான முகம் இதுதான்.

அதிபர் ஜி தனது நாட்டின் பேச்சுவார்த்தை குறித்து பேசுகிறார், ஆனால் எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க பேச்சு வார்த்தையில் ஈடுபட மறுத்துவிட்டார்.

3,488 கிலோமீட்டர் நீளமுள்ள வரையறுக்கப்படாத எல்லையில் பிரச்சினையை தீர்க்க இந்தியா இப்போது 44 ஆம் ஆண்டுகளில் எல்ஐசி பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 5 தசாப்தங்களில், இது 10 க்கும் மேற்பட்ட பெரிய மோதல்களைக் கண்டது, ஏனென்றால் சீனா பேச்சுவார்த்தையை  மறுக்கிறது.

Next Story