இந்தியா தாக்குதல் நடத்தும் என கேட்டதும் கால்கள் நடுங்கிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி - பாகிஸ்தான் எம்பி கிண்டல்


இந்தியா தாக்குதல் நடத்தும் என கேட்டதும் கால்கள் நடுங்கிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி - பாகிஸ்தான் எம்பி கிண்டல்
x
தினத்தந்தி 29 Oct 2020 5:26 AM GMT (Updated: 29 Oct 2020 5:26 AM GMT)

அபிநந்தனை விடுவித்திருக்கா விட்டால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி இருக்கும். இதை கேட்டதும் ராணுவத் தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கின என பாகிஸ்தான் எம்பி கூறி உள்ளார்.

புதுடெல்லி

14 பிப்ரவரி 2019  புல்வாமாவில் மத்திய பாதுகாப்பு படையின் அணி வகுப்பு மீது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் தாக்கி 40 இந்திய வீரர்களைக் கொன்றனர்.

இதை தொடர்ந்து 26 பிப்ரவரி 2019 அன்று இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தானைக் கடந்து பாலகோட்டில் பயங்கரவாத முகாம் அழித்தன.

2019 பிப்ரவரியில் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை விரட்டிச் சென்று வீழ்த்திய பின் சிறைப்பிடிக்கப்பட்டார்.

27 பிப்ரவரி பாகிஸ்தான் இராணுவத்தால் இந்திய விமானப்படை போர் விமானி அபிநந்தன் வர்தாமனை பிடித்து சித்திரவதை செய்தது சர்வதேச சமூகத்தில் பெரிய சலசலப்பைத் ஏற்படுத்தியது.

அபிநந்தன் பிடிபட்ட போது பல பிரச்சார வீடியோக்கள் வெளிவந்தன, அவற்றில் சில பாகிஸ்தான் அதிகாரிகள் அவருக்கு முதலுதவி மற்றும் தேநீர் வழங்குவதற்கான ‘நல்லெண்ண சைகைகளை’ காட்டுகின்றன. அதுபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் படையினரால் ஐ.ஏ.எஃப் விமானி கொடூரமாக தாக்கப்படுவதைக் காண முடிந்தது. 

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால் இந்தியா பாகிஸ்தான் மீது வான் தாக்குதல் தொடுக்கப் போவதாக எச்சரித்தது என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி எம்பி அயாஸ் சாதிக் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் (பி.எம்.எல்-என்) தலைவர் அயாஸ் சாதிக் கூறியதாவது:-

பிப்ரவரி 2019 பிரதமர் இம்ரான் கானுக்கு வர்தமனை "சமாதானத்தின் சைகை" என்று விடுவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அபிநந்தன் பிடிபட்டதும் அப்போது நடைபெற்ற அவசரக் கூட்டத்திற்கு வந்த வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி பாகிஸ்தானில் உள்ள நாடாளுமன்றத் தலைவர்களிடம் பிப்ரவரி 27 அன்று இரவு 9 மணிக்கு  இந்தியா தாக்குதல் நடத்தப்போவதாகக் கூறினார். இந்தியா தாக்குதல் நடத்த இருப்பதாக கூறியதும், ராணுவத் தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்வை கொட்டியது. இந்த கூட்டத்தில் இம்ரான் கான் கலந்து கொள்ள மறுத்துவிட்டார், 

அபிநந்தனை போக விடுங்கள் என்று குரேஷி கேட்டுக் கொண்டதாகவும், இதனைத் தொடர்ந்துதான் அபிநந்தன் வர்த்தமான் வாகா அட்டாரி எல்லை வழியாக 2019ம் ஆண்டு மார்ச் முதல்தேதியில் இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் எம்பி குறிப்பிட்டார்.

Next Story