மரணம் சந்தோஷமா? துக்கமா?
அரசன் ஒருவன் இறக்கும் தருவாயில் இருந்தான். அவனை சூழ்ந்திருந்த அமைச்சர்களும், உறவினர் களும் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தனர்.
அரசன் ஒருவன் இறக்கும் தருவாயில் இருந்தான். அவனை சூழ்ந்திருந்த அமைச்சர்களும், உறவினர் களும் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தனர்.
அவர்களைப் பார்த்த அரசன், ‘மரணம் மகிழ்ச்சி தரக் கூடியதா? துன்பம் தரக்கூடியதா?’ என்று கேட்டான். என்ன பதில் சொல்வது என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், ஒரு அமைச்சர் மட்டும், ‘அரசே! இறப்பு மகிழ்ச்சி தரக்கூடியது தான்’ என்றார்.
எதிர்பாராத இந்த பதிலை கேட்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர்.
‘எதனால் அப்படி சொல்கிறீர்?’ என்று அந்த அமைச்சரிடம் அரசன் கேட்டான்.
‘அரசே! இறப்பு துன்பம் தருவதாக இருந்தால், இறந்தவர்கள் பலர் மீண்டும் இங்கே வந்திருப்பார்கள். அப்படி யாரும் இதுவரை இங்கே வரவில்லை. அதனால் தான் இறப்பு மகிழ்ச்சியானது என்றேன்’ என்று விளக்கம் தந்தார் அமைச்சர்.
அரசனும் நிம்மதியாக கண்ணை மூடினான்.
அவர்களைப் பார்த்த அரசன், ‘மரணம் மகிழ்ச்சி தரக் கூடியதா? துன்பம் தரக்கூடியதா?’ என்று கேட்டான். என்ன பதில் சொல்வது என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், ஒரு அமைச்சர் மட்டும், ‘அரசே! இறப்பு மகிழ்ச்சி தரக்கூடியது தான்’ என்றார்.
எதிர்பாராத இந்த பதிலை கேட்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர்.
‘எதனால் அப்படி சொல்கிறீர்?’ என்று அந்த அமைச்சரிடம் அரசன் கேட்டான்.
‘அரசே! இறப்பு துன்பம் தருவதாக இருந்தால், இறந்தவர்கள் பலர் மீண்டும் இங்கே வந்திருப்பார்கள். அப்படி யாரும் இதுவரை இங்கே வரவில்லை. அதனால் தான் இறப்பு மகிழ்ச்சியானது என்றேன்’ என்று விளக்கம் தந்தார் அமைச்சர்.
அரசனும் நிம்மதியாக கண்ணை மூடினான்.
Related Tags :
Next Story