நகர வாழ்க்கைக்கு ‘குட்-பை’
வேனில் சுற்றுலா செல்வதற்காக தங்கள் கனவு இல்லத்தை ரூ.1.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்கள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தம்பதியர்.
பரபரப்பான வாழ்க்கையில் சுற்றுலா செல்வதை விரும்பாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த விக்டோரியா மெக்டொனால்டு மற்றும் அவரது கணவர் ஸ்காட் ரோஸ் ஆகியோர் ஒரு படி மேலே போய், தங்கள் கனவு இல்லத்தை விற்று சுற்றுலாவைத் திட்டமிட்டுள்ளார்கள்.
இளம் தம்பதி இருவரும் வேலையை விட்டுவிட்டு, தங்கள் நாய்களுடன் தனி வேனில் நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு 3 அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கினார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. தொழில் ரீதியாக விரக்தியடைந்த அவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பே மாற்றத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர்.
எண்ணெய் மற்றும் வாயு தொழிற்சாலையில் கொள்முதல் நிர்வாகியாக விக்டோரியா பணியாற்றினார். அவரது கணவர் ஸ்காட் ஹெலிபோர்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். மன அழுத்தம் காரணமாக இருவரும் தாங்கள் பார்த்துவந்த பணிகளை ராஜினாமா செய்தனர்.
தனி வேனில் நாடு முழுவதும் சுற்றுலா செல்ல திட்டமிட்ட அவர்கள், கடந்த மார்ச் மாதம் தங்கள் வீட்டை ரூ. 1.5 கோடிக்கு விற்றனர். இரண்டு மாத பயணத்திட்டத்துடன் ஸ்காட்லாந்தை அவர்கள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர்.
Related Tags :
Next Story