வானத்தின் வர்ணஜாலம் மின்னல்


வானத்தின் வர்ணஜாலம் மின்னல்
x
தினத்தந்தி 18 April 2022 3:43 PM GMT (Updated: 18 April 2022 3:43 PM GMT)

மின்னல் என்பது மேகங்களுக்குள்ளேயே ஏற்படும் மின் வெளியேற்றத்தால் உண்டாகிறது. மேகங்களுக்குள் நடக்கும் மோதல்கள் மின்னல் ஏற்பட காரணம். மின்னல் நிகழும் போது ஒரு முழு மேகத்தையும் ஒளிர செய்யும்.

புயலின் போது இந்த மேகங்களுக்குள் இருக்கும் மழை, பனி அல்லது பனியின் மோதல் துகள்கள், புயல் மேகங்களுக்கும் தரைக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை அதிகரிக்கின்றன. புயல் மேகங்களின் அடிப்பகுதியில் இருக்கும் மேகங்கள் எதிர்மறை சார்ஜ் கொண்டவையாக இருக்கும். நிலத்தில் உள்ள பொருட்கள் நேர்மறையான சார்ஜ் ஆகின்றன. இப்போது இயற்கையானது நேர்மறை மற்றும் எதிர்மறை சார்ஜிங் ஏற்றப்பட்ட மேகம் மற்றும் நிலம் ஆகியவற்றுக்கு இடையில் மின்னோட்டத்தைக் கடந்து தீர்வு காண முற்படும் ஒரு ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. இதுவே மின்னல் உருவாக காரணம். மின்னலின் போது ஒரு பிளாஷ் சூரியனின் மேற்பரப்பை விட 5 மடங்கு சூடான வெப்பநிலையை கொண்டிருக்கும். இது சுற்றியுள்ள காற்றை வெப்பமாக்கும். இந்த வெப்பம் தான் சுற்றியுள்ள காற்றை விரைவாக விரிவுபடுத்துவதற்கும் அதிர்வு செய்வதற்கும் காரணமாகிறது. இந்த அதிர்வுதான் மின்னலைப் பார்த்த சிறிது நேரத்திலேயே நாம் கேட்கும் இடி சத்தத்தை உருவாக்குகிறது. சில வகையான மின்னல்கள் மேகங்கௌ விட்டு வெளியேறாது. காட்டுத் தீ, எரிமலை வெடிப்புகள் மற்றும் பனிப்புயல் ஆகியவற்றால் பிற அரிய மின்னல் வடிவங்கள் உருவாகலாம். பந்து போன்ற மின்னல் ஈர்ப்பு அல்லது இயற்பியல் விதிகளை அறியாமல் மிதந்து செல்லும் மின்னல், ஒளிரும் மற்றும் குதிக்கும் ஒரு சிறிய மின்னல் என இன்னும் பல மின்னல் வடிவங்கள் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேகத்திலிருந்து தரையில் இருக்கும் மின்னல் என்பது நேர்மறை மின்னல் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை புயல் மேகங்களின் நேர்மறையான சார்ஜ் செய்யப்பட்ட டாப்ஸில் உருவாகிறது. பொதுவாக மழைக் காலத்தில் வளிமண்டலத்தில் இடம்பெறும் நிலைமின் வெளியேற்றமே மின்னல் மிகப் பிரகாசமான வெளிச்சக்கீற்று தோன்றி அதன் பின்னர் சற்று நேர இடைவெளியில் வெடிப்புச் சத்தம் கேட்கும். மின்னல் பல மில்லியன் வோல்ட் அளவுள்ள மின்னழுத்தத்தை கொண்டுள்ளதால் அதனை சுற்றியுள்ள காற்றை அதிகமான வெப்பநிலைக்கு கொண்டு செல்லும் சக்திகொண்டது. சில வேளைகளில் மின்னல் கீற்று தெரியாலாம். ஆனால் ஒலி கேட்காது. இதற்கு காரணம் மின்னல் மிகத் தொலைவில் இருந்து ஒலி வந்து அடைந்திருக்காது. ஆனால் ஒளி வந்திருக்கும் என்பதேயாகும். மின்னல் கண்ணை கவருவது மட்டுமல்ல அது ஆபத்தானது. ஒவ்வொரு ஆண்டும் மின்னல் மூலம் உலகளவில் எராளமானவர்கள் உயிரிழக்கிறார்கள். மின்னலின் தாக்கம் இதயத் தடுப்பு மற்றும் கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்தக்கூடும். மின்னலின் போது எந்த ஒரு மின்னணு உபகரணங்களையும் பயன்படுத்தக்கூடாது.


Next Story