எச்.பி.சி.எல். லாபம் 3 மடங்கு உயர்ந்தது


எச்.பி.சி.எல். லாபம் 3 மடங்கு உயர்ந்தது
x
தினத்தந்தி 12 Feb 2020 11:18 AM GMT (Updated: 12 Feb 2020 11:18 AM GMT)

சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.248 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்) நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.747 கோடி நிகர லாபம் ஈட்டி இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.248 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது எச்.பி.சி.எல். நிறுவனப் பங்கு ரூ.240.50-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.243.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.239.55-க்கும் சென்றது. இறுதியில் ரூ.239.85-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.40 சதவீத ஏற்றமாகும்.

Next Story