மளிகை கடையில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


மளிகை கடையில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

மளிகை கடையில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அரணாரையில் ஒரு மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட மொத்தம் 10 கிலோ 200 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கடையின் உரிமையாளரை குமாரை (வயது 52) கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.


Next Story