1,008 லிட்டர் பால் அபிஷேகம்


1,008 லிட்டர் பால் அபிஷேகம்
x

புளியங்குடி முப்பெருந்தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது

தென்காசி

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு பால் அபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி வைகாசி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். முப்பெரும்தேவி அம்மனுக்கு பச்சை அரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமண பொருட்கள் உள்பட 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரானோ வைரஸ் முழுவதும் அழிந்து போகவும் சிறப்பு மந்திரங்கள், பிரார்த்தனைகளும், 1,008 லிட்டர் சிறப்பு பால் அபிஷேகமும் நடந்தது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடைபெற்றது. முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story