ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்


ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்
x

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர்.

12 மீனவர்கள் கைது

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர்.

சொந்த ஊர் திரும்பினர்

இந்த நிலையில் 12 மீனவர்களும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்து இறங்கினர். அங்கிருந்து மீன்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாகனம் மூலம் ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியான சொந்த ஊருக்கு திரும்பினர். மீனவர்கள் ஊர் திரும்பியது அவர்களது குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய வைத்தாலும், அவர்களது வாழ்வாதாரமான படகுகள் விடுவிக்கப்படாதது மீனவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story