ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது


ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
x

ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தஞ்சாவூர்

தஞ்சை விளார் சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வம் மகன் பிரபு (வயது 23). ஆட்டோ டிரைவர். இவருக்கும், லட்சுமணன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் லட்சுமணனுக்கு ஆதரவாக பூக்காரத்தெருவை சேர்ந்த ராஜா மகன் சீனு என்ற சீனிவாசன் (26), மாரிக்குளம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் மணிகண்டன் (25) உள்பட 4 பேர் சேர்ந்து பிரபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் பிரபுவை தாக்கினர். இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் பிரபு புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து சீனு என்ற சீனிவாசன், மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தார். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்.






Next Story