செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளுர் மாவட்டம் வேப்பம்பட்டை அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயதுரை (வயது 29). இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சொந்த வேலை காரணமாக திருவண்ணாமலை வந்த அவர் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் இருந்த 2 பேர் விஜயதுரையின் சட்டை பையில் இருந்த செல்போனை திருடி கொண்டு ஓட முயன்றனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்டவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு (26), அன்பரசன் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story