வெவ்வேறு விபத்துகளில் டிரைவர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் டிரைவர் உள்பட 2 பேர் பலி
x

கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டையில் வெவ்வேறு விபத்துகளில் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

டிரைவர் பலி

ராணிப்பேட்டையில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு லாரி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணகிரியில் ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் பக்கமாக வந்து கொண்டு இருந்தது. அப்போது பின்னால் திருப்பத்தூரில் இருந்து ஓசூர் நோக்கி மற்றொரு லாரி சென்று கொண்டு இருந்தது.

இந்த லாரியை திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த இளவமூர்த்தி (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது திடீரென்று லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் இளவமூர்த்தி உயிர் இழந்தார். விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பஸ் மோதியது

ஊத்தங்கரை அருகே உள்ள கொம்மம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் மோட்டார்சைக்கிளில் கானப்பட்டி ஜங்ஷன் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story