டிராக்டர்களை அடகு வைத்து மோசடி


டிராக்டர்களை அடகு வைத்து மோசடி
x
தினத்தந்தி 25 Jan 2023 7:15 PM GMT (Updated: 25 Jan 2023 7:15 PM GMT)

டிராக்டர்களை அடகு வைத்து மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்

நாகை அருகே உள்ள குறிச்சியை சேர்ந்தவர் இளையரசன். இவர் உள்பட அந்த பகுதியை சேர்ந்த பலர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களிடம் 2 பேர், மாத வாடகைக்கு டிராக்டர்களை பெற்றுக்கொள்வதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்தனர். அதன்படி டிப்பர்களுடன் கூடிய 7 டிராக்டர்களை பெற்று சென்ற அவர்கள் பல்வேறு பகுதிகளில் புரோக்கர்களிடம் டிராக்டர்களை அடமானம் வைத்து மோசடி செய்தனர். இதை அறிந்த இளையரசன் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இதனிடையே 7 டிராக்டர்களை குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.


Next Story