வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

திருச்சி

மணப்பாறையை அடுத்த கொட்டபட்டி அருகே வாகனம் மோதி 45 வயதுமதிக்க தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இது தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் வையம்பட்டி ரெயில் நிலையத்துக்கும், செட்டியாப்பட்டி ரெயில் நிலையத்துக்கும் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் பச்சைநிற டிரவுசர், பச்சை நிறத்தில் அரை கை சட்டை அணிந்து இருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. நேற்று காலை அந்த வழியாக சென்ற ரெயில் மோதி அவர் இறந்து இருக்கலாம் என தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story