சாராயம் விற்ற 2 பேர் கைது
வடபொன்பரப்பி, சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் மல்லாபுரம், ரங்கப்பனூர், புதுப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராமன்(வயது 45) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன் தலைமையிலான போலீசார் பாப்பாத்திமூலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்(வயது 47) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story