ஜனாதிபதி தேர்தல்: சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினார் ராம்நாத் கோவிந்த்


ஜனாதிபதி தேர்தல்: சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினார் ராம்நாத் கோவிந்த்
x
தினத்தந்தி 1 July 2017 11:20 AM GMT (Updated: 1 July 2017 11:20 AM GMT)

ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் சந்தித்தார் ராம்நாத் கோவிந்த்; குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தார்.

சென்னை

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் இன்று காலை சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார்.

அங்கு தன்னை சந்தித்த புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.யிடம் ஆதரவு திரட்டினார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர்களை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பு எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அவரது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார். 

Next Story