நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். #ActressSridevi
சென்னை,
நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், துபாயில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க சென்ற போது நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI) விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது. 2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியும் கவுரவித்தது. சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளையும் நடிகை ஸ்ரீதேவி பெற்றுள்ளார். ஆந்திர அரசின் நந்தி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story