தமிழக பட்ஜெட் : வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்
வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. #TNBudget2018
சென்னை
தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* நடப்பாண்டில் ரூ.1,43,962 கோடி கடன் வாங்க முடிவு.
* 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
* முதலீட்டு மானியம் 2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* கைத்தறி உதவி திட்டம் என்ற புதிய திட்டத்தை ரூ.40 கோடியில் தமிழக அரசு செயல்படுத்தும்.
* கைத்தறி நெசவில் புதுமை முயற்சிகளை ஊக்கப்படுத்த நிதியுதவி அளிக்கப்படும்.
* கைத்தறி துணி விற்பனை தள்ளுபடி மானியம் 80 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்.
* பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டப்பணிகள் ரூ. 1,244.35 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* 16 பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு சாலை இணைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு ரூ.250 கோடி மானியமாக வழங்கப்படும்.
* அம்பத்தூர் சிப்காட்டில் பன்னடுக்கு பணிமனை அமைக்கப்படும்.
* வருவாய் துறைக்கு ரூ.6,144.58 கோடி ஒதுக்கீடு.
* விவசாயிகளுக்கு கூட்டுறவு நிறுவனம் மூலம் ரூ.8,000 கோடி பயிர்க்கடன்.
* புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ.1,087 கோடி ஒதுக்கீடு.
* நியாய விலை கடையில் உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு.
Related Tags :
Next Story