அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சசிகலாதான் பொதுச்செயலாளர் - டிடிவி தினகரன்


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சசிகலாதான் பொதுச்செயலாளர் - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 21 March 2018 3:05 PM GMT (Updated: 21 March 2018 3:05 PM GMT)

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சசிகலாதான் பொதுச்செயலாளர் என டிடிவி தினகரன் கூறிஉள்ளார். #Sasikala #TTVDinakaran


சென்னை,


மதுரை மேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.  
ஜெயலலிதா படத்துடன் புதிய கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைத்த டி.டி.வி. தினகரன், “துரோகிகளிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கும் வரை “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் இயங்குவோம்” என்று அறிவித்தார். இப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சசிகலாதான் பொதுச்செயலாளர் என டிடிவி தினகரன் கூறிஉள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 25ஆம் தேதி திட்டமிட்டபடி தஞ்சையில் உண்ணாவிரதம் என குறிப்பிட்டு உள்ளார். 

Next Story