மத அமைதியை சீர்குலைக்க யார் முயன்றாலும் கடும் நடவடிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை


மத அமைதியை சீர்குலைக்க யார் முயன்றாலும் கடும் நடவடிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 March 2018 5:22 AM GMT (Updated: 22 March 2018 5:22 AM GMT)

மத அமைதியை சீர்குலைக்க யார் முயன்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார். #TNAssembly #EdappadiPalanisamy

சென்னை

மதுரையில் தேவாலயங்கள் தாக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து சிறுபான்மையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதவாத அமைப்புகளின் தாக்குதலில் இருந்து வழிபாட்டு தலங்களை காக்க வேண்டும், அவ்வாறு செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எம்.எல்.ஏ ஆஸ்டின் கூறினார்.

இதற்கு பதில் அளித்து முதல் அமைச்சர் பேசும்  போது மத அமைதியை சீர்குலைக்க யார் முயன்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை  விடுத்து உள்ளார்.

Next Story