வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது குறித்து விளக்கம் வேண்டும் - திருமாவளவன்
வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது குறித்து விளக்கம் வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #NEET #Thirumavalavan
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது:
தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது குறித்து விளக்கம் வேண்டும். மாணவர்கள் நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் சென்றதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். நுழைவுத் தேர்வை மாநில கல்வி வாரியங்களிடம் ஒப்படைக்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு மெத்தனமாகவும், பலவீனமாகவும் இருந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story