சித்தாலப்பாக்கத்தில் 2 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி சாவு


சித்தாலப்பாக்கத்தில் 2 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி சாவு
x
தினத்தந்தி 15 May 2018 10:30 PM GMT (Updated: 15 May 2018 9:17 PM GMT)

சித்தாலப்பாக்கத்தில் 2 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி சாவு குளிர்சாதன பெட்டி அருகே விளையாடியபோது மின்சாரம் தாக்கியது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு தஷிகா (வயது5) என்ற மகளும், பிரதீஷ் (2) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று பிரதீஷ் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் விளையாட சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக குளிர்சாதன பெட்டியின் பின்புறம் உள்ள கம்பியை சிறுவன் தொட்டபோது, அவனை மின்சாரம் தாக்கியது. இதில் சிறுவன் பிரதீஷ் தூக்கி வீசப்பட்டான். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவன் பிரதீசை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பிரதீஷ் உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story