இனி அடிக்கடி உங்களை தேடி வரும் இந்த பயணம் நிகழும் கமல் பேச்சு


இனி அடிக்கடி உங்களை தேடி வரும் இந்த பயணம் நிகழும் கமல் பேச்சு
x
தினத்தந்தி 17 May 2018 5:32 AM GMT (Updated: 17 May 2018 5:32 AM GMT)

இனி அடிக்கடி உங்களை தேடி வரும் இந்த பயணம் நிகழும் என்று கமலஹாசன் கூறியுள்ளார். #Kamal

சென்னை,

நாகர்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு மக்கள் நீதி மய்யத்தினர் திரளாக வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில்   பணகுடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியதாவது:

 மக்களின் தேவைகளை அறிந்து கொள்ளவே பயணம் மேற்கொண்டுள்ளேன். இனி அடிக்கடி உங்களை தேடி வரும் இந்த பயணம் நிகழும்; மக்களை தரிசிப்பதற்காகவே இந்த பயணம்.

எனக்கூறினார்.

Next Story