நீட் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண் பெற்று 12-வது இடம்


நீட் தேர்வில்  தமிழக மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண் பெற்று  12-வது இடம்
x
தினத்தந்தி 4 Jun 2018 10:00 AM GMT (Updated: 4 Jun 2018 10:11 AM GMT)

நீட் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12-வது இடம் பிடித்து உள்ளார். #NeetExam

சென்னை

மே 6-ல் நடந்த  நீட் தோ்வை  நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். தமிழகத்தில் 1,14,602   மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ளனா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி  இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.

180 கேள்விகள். தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு ‘நீட்’ தேர்வு நடைபெற்றது.  நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து பீகாரை சேர்ந்த மாணவி கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியலில் 180க்கு 171, வேதியியலில் 180க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் தேர்வு முடிவு  12.30 மணிக்கே வெளியிடப்பட்டுள்ளது.  நீட் தேர்வில் ,தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 45336 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.   இது 39.55 சதவீதம் ஆகும் .தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 12 வது இடம் பிடித்து உள்ளார்.

தமிழில் தேர்வு எழுதிய  24,720 பேரில் 1.86 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் நீட் தேர்வில் அதிகம் தேர்வு அடைந்து உள்ளனர். 76,778 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

வெளிநாடு வாழ் மாணவர்களில் 1200 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story