சென்னையில் 200 சவரன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் கொள்ளை; மா்ம ஆசாமிகள் கைவரிசை


சென்னையில் 200 சவரன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் கொள்ளை; மா்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 9 Jun 2018 9:42 AM GMT (Updated: 9 Jun 2018 9:42 AM GMT)

சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் மா்ம ஆசாமிகளால் 200 சவரன் நகைகள், ரூ. 7 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. #Robbery

சென்னை,

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இதனைத்தொடர்ந்து தற்பொது சென்னை வேளச்சேரி பகுதியில் இளங்கோ என்பவரது வீட்டில் 200 சவரன் நகைகள், ரூ. 7 லட்சம் பணம் ஆகியன மா்ம நபா்கள் கொள்ளை அடித்து சென்றனா்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு சூழ்நிலை நிலவியுள்ளது. மேலும், இளங்கோ வெளியூர் சென்றதை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மா்ம ஆசாமிகளை தேடி வருகின்றனா்.

Next Story