சென்னையில் காவலா்களுக்கு ரத்த தானம் முகாம் தொடக்கம்
சென்னையில் காவலா்களுக்காக ரத்த தானம் முகாம் தொடங்கி முகாமில் காவலா்கள் ரத்த தானம் செய்தனா். #BloodDonate
சென்னை,
அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர்.
சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் காவலர்கள் ரத்த தான முகாமை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளார். காவல் துணை ஆணையர் சரவணன், 125 காவலர்கள், 5 பெண் காவலர்கள் ஆகியோரும் ரத்த தானம் செய்துள்ளனர். நிகழ்ச்சியில் இரத்த தானம் செய்வதன் நம்மைகளும் விளக்கப்பட்டது.
Related Tags :
Next Story