மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் - முதல்வர் எடப்பாடி
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
சென்னை
110-வது விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய விவரம் வருமாறு:-
* அணைகளில் நீர் ஆவியாவதை தடுக்க ரூ.1,125 கோடியில் மிதக்கும் சூரிய மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
* 10 இடங்களில் 110 கிலோவாட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
* சென்னையில் 6 இடங்களில் ரூ.932 கோடியில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
* சேலம், எடப்பாடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
* புதிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்கப்படும்.
* ஊரகப்பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைக்க ரூ.100 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
* ரூ.87 கோடியில 1,000 அங்கன்வாடிகள் அமைக்கப்படும்.
* ஊரகப் பகுதியில் 2.50 லட்சம் உரிஞ்சுக்குழிகள் அமைக்கப்படும்.
* 51 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளில் ரூ.217 கோடியில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
* மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி மன்றங்களில் 1,350 கி.மீ., நீளத்திற்கு 1000 கோடி ரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* ரூ.192.80 கோடியில் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
Related Tags :
Next Story