உதகை அருகே மந்தாடா பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு


உதகை அருகே மந்தாடா பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 14 Jun 2018 7:29 AM GMT (Updated: 14 Jun 2018 7:29 AM GMT)

உதகை அருகே மந்தாடா பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நேரிட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.

கோவை,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஆறுகளில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது, மண் சரிவு சம்பவங்களும் நடந்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில்  மந்தாடா பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்து மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 30 பேர் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு உள்ளனர், அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


Next Story