18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு 3-வது நீதிபதி யார்? நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார்


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு 3-வது நீதிபதி யார்? நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார்
x
தினத்தந்தி 14 Jun 2018 8:57 AM GMT (Updated: 14 Jun 2018 8:57 AM GMT)

தகுதிநீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதி யார்? என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார். #MLAsDisqualification

சென்னை,

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனையடுத்து வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிஉள்ளார். தகுதிநீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதி யார்? என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார். தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் 3 ஆவது நீதிபதியை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story