சென்னை: புழல் சிறையில் ‘பாக்ஸர்’ முரளி என்ற கைதி கொலை


சென்னை: புழல் சிறையில் ‘பாக்ஸர்’ முரளி என்ற கைதி கொலை
x
தினத்தந்தி 20 Jun 2018 6:48 AM GMT (Updated: 20 Jun 2018 8:55 AM GMT)

புழல் சிறையில் ‘பாக்ஸர்’ முரளி என்ற கைதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். #Murder

சென்னை,

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடியான பாக்ஸர் முரளி. இவர் மீது வியாசர்பாடி, ராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்பட பல வழக்குள் நிலுவையில் உள்ளன. மேலும், பாக்ஸர் முரளி ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புழல் சிறையில் இருந்த அவருக்கும் சக கைதிகள் 5 பேருக்கு ஏற்பட்ட மோதலில், கொடூரமான முறையில் அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சிக்கிய  பாக்ஸர் முரளிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாக்ஸர் முரளி உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story