எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நாளை மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நாளை மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2018 7:56 PM GMT (Updated: 22 Jun 2018 7:56 PM GMT)

வைகை, பல்லவன், திருச்செந்தூர், பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ் பிரஸ் ரெயில் சேவையில் நாளை ஒரு நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

வைகை, பல்லவன், திருச்செந்தூர், பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ் பிரஸ் ரெயில் சேவையில் நாளை ஒரு நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருகை தாமதம்

சென்னை வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ் பிரஸ், மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஆகியவை 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாகவும், திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாகவும், லோக்மான்யா திலக்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் தாமதாகவும் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்துசேரும்.

புறப்பாடு தாமதம்

சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு பதிலாக, 20 நிமிடங்கள் தாமதமாகவும், சென்னை- காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாகவும், சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகவும், செங்கல்பட்டு-காக்கிநாடா துறைமுகம் சர்கார் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாகவும் புறப்பட்டு செல்லும்.

இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story