சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் தர்ணா போராட்டம்


சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2018 5:08 AM GMT (Updated: 23 Jun 2018 5:08 AM GMT)

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் தர்ணா போராட்டம் நடத்தினர். #MKStalin

கிண்டி,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பரமத்தி சாலை வழியாக அண்ணாநகருக்கு காரில் சென்றார். அப்போது கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.

அதில் ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட 241 பேரில் 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தி.மு.க.வை சேர்ந்த 192 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கருப்பு கொடி ஏந்தி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.

அவர்கள் ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story