சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் - ஹெச்.ராஜா


சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் - ஹெச்.ராஜா
x
தினத்தந்தி 2 July 2018 8:33 AM GMT (Updated: 2 July 2018 8:33 AM GMT)

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #HRaja #BJP

சென்னை,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டப்பணிக்கு தேவையான நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் அரியானூர், பூலாவரி, நிலவாரப்பட்டி, உடையாப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம், ராமலிங்கபுரம், மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, சுக்கம்பட்டி, வெள்ளியம்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர் வரை இந்த சாலை பணிக்கு நில அளவீடு நடந்து முடிந்துள்ளது.

இந்த பகுதிகளில் நில அளவீட்டின் போது, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் வழியாக இந்த சாலை அமைக்கக்கூடாது என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில்  ஹெச்.ராஜா கூறியதாவது:

பாஜக ஆட்சியில், உணவு பொருட்களின் விலை பாதியாக குறைந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர மத்திய அரசு தயார், ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.  சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story