வருகிற ஜூலை 15ம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்


வருகிற ஜூலை 15ம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 5 July 2018 5:39 AM GMT (Updated: 5 July 2018 5:39 AM GMT)

தமிழகம் முழுவதும் பள்ளிகளின் கட்டிடங்கள் பழுது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #Chengottiyan #NEET

சென்னை

சட்டப்பேரவையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். 

அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

நீட் தேர்வுக்காக 413 மையங்கள் அமைத்து பயிற்சி அளித்ததில் தமிழக அரசுக்கு ரூ.4.5 கோடி செலவாகி உள்ளது.  வருகிற ஜூலை 15ம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். தமிழகத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின் முடிவில் கட்டிடங்கள் பழுது பார்த்து, தேவையெனில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.

Next Story