குடிமராமத்து பணிகளைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்


குடிமராமத்து பணிகளைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
x
தினத்தந்தி 8 July 2018 10:40 AM GMT (Updated: 8 July 2018 10:40 AM GMT)

தமிழகத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளைக் கண்காணிக்க ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ. 328.95 கோடி செலவில் 1,511 குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளாக ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், ககன்தீப் சிங் பேடி, அமுதா, பங்கஜ் குமார் பன்சல், ராஜேந்திர ரத்னோ, ஆசிஷ் வச்சானி, தரேஷ் அகமது, கோபால் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 

Next Story