தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு


தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
x
தினத்தந்தி 10 July 2018 7:44 AM GMT (Updated: 10 July 2018 7:44 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் உயர்த்தப்பட்டது. அதே போல் டீசல் விலையும் 18 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ. 72.03-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice

சென்னை,

பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்தபடி இருந்தது. வெறும்10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது.  இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால், விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. ஜூன் மாத இறுதியிலிருந்து 
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் விலையில் உயர்வு காணப்பட்டது.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை 18 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 79.43-க்கு விற்கப்படுகிறது. அதே போல் டீசல் விலையும் 18 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 72.03-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் என்ற அச்சத்தால் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story