மேட்டூர் நீர்திறப்பு குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு


மேட்டூர் நீர்திறப்பு குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
x
தினத்தந்தி 15 July 2018 5:16 AM GMT (Updated: 15 July 2018 5:16 AM GMT)

மேட்டூர் அணை நீர்திறப்பு குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜரின் 116-வது பிறந்த நாள் தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில் சென்னையில் காமராஜர் சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,

”முட்டை கொள்முதலில் ஊழல் உள்ளதாக கூறுவதில் சிறிதளவு கூட உண்மையில்லை. வரி ஏய்ப்புக்காக நடைபெறும் சோதனையை முட்டை கொள்முதலில் ஊழல் எனக் கூறி திசை திருப்ப கூடாது. மேலும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை நிலையை ஆணையம் விசாரணை செய்து அறிவிக்கும்” எனக் கூறினார். இந்நிலையில் மேட்டூர் அணை நீர்திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர், ”மேட்டூர் அணை நீர்திறப்பு குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்” என பதில் கூறினார்.

Next Story