நாட்டின் வளர்ச்சிக்கு எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: நடிகர் ரஜினிகாந்த்


நாட்டின் வளர்ச்சிக்கு எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: நடிகர் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 15 July 2018 6:32 AM GMT (Updated: 15 July 2018 6:32 AM GMT)

எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் உருவாகினால் தான் நாடு முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். #Rajinikanth

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இச்சந்திப்பில் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி, எட்டு வழிச்சாலை திட்டம், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய ரஜினிகாந்த் கூறுகையில்,

”தமிழகத்தில் கல்வி வளர்ச்சி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவே உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். சக்திவாய்ந்த லோக் ஆயுக்தா இயங்கினால் சிறப்பாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது தான். காமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி உருவாக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. தமிழருவி மணியன் அரசியலில் என்னுடன் இணைய நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியே” எனக் கூறினார். 

இந்நிலையில் தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் எட்டு வழிச்சாலை குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ”நாட்டின் வளர்ச்சிக்கு எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை. எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் உருவாகினால் தான் நாடு முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும்” எனக் கூறியுள்ளார்.

Next Story