திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழப்பு


திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 Aug 2018 3:26 AM IST (Updated: 2 Aug 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சென்னை,

திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (வயது 69)  இவர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார்.  இந்தநிலையில் 
நள்ளிரவு இரவு உறங்கி கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.  இதனால் குடும்பத்தினர் அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.  மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை சட்டமன்ற உறுப்பினராக ஏ.கே.போஸ் தேர்வானவர்.

Next Story