மறைந்த எம்.எல்.ஏ, ஏ.கே.போஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார் முதல் அமைச்சர் பழனிசாமி


மறைந்த எம்.எல்.ஏ, ஏ.கே.போஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார் முதல் அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 2 Aug 2018 2:13 AM GMT (Updated: 2 Aug 2018 2:17 AM GMT)

மறைந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் உடலுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.

சென்னை,

திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (வயது 69).  இவர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார்.  நேற்று இரவு இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் எம்.எல்.ஏ போஸுக்கு மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது. மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உடலுக்கு பிற்பகல் 1 மணிக்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று  அஞ்சலி செலுத்துகிறார்.  அதேபோல்,  ஏ.கே.போஸ் உடலுக்கு பகல் 12 மணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை சட்டமன்ற உறுப்பினராக ஏ.கே.போஸ் தேர்வானவர். இவர் கடந்த 2006,2011, -ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எஸ்.எம்.சீனிவேலு வெற்றி பெற்றார். 

ஆனால் அவர் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே உடல் நலக்குறைவால் காலமானர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.

Next Story