உடல்நலம் தேறியது சிகிச்சை முடிந்து தா.பாண்டியன் வீடு திரும்பினார்


உடல்நலம் தேறியது சிகிச்சை முடிந்து தா.பாண்டியன் வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 2 Aug 2018 8:35 PM GMT (Updated: 2 Aug 2018 8:35 PM GMT)

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 28-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுதிணறல் மற்றும் சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை, 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 28-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுதிணறல் மற்றும் சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து தா.பாண்டியனின் உடல் நலம் குறித்து விசாரிக்க கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். இதேபோல் நேற்று காலை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு நேரில் வந்து தா.பாண்டியன் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்த நிலையில் உடல்நலம் தேறியதையடுத்து நேற்று மாலை தா.பாண்டியன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Next Story