சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு


சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு
x
தினத்தந்தி 3 Aug 2018 6:25 AM GMT (Updated: 3 Aug 2018 6:25 AM GMT)

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்து உள்ளார்.

சென்னை,

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு அளிப்பதாக தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டிருந்தது. முன்னதாக இது அரசின் கொள்கை முடிவு என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருந்தது.

சிலை கடத்தல் வழக்குகளை ஐ ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வரும் நிலையில் அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை  ஐகோர்ட்டில்  முறையீடு செய்துள்ளார். மனுவாக தாக்கல் செய்ததால் விசாரிப்பதாக நீதிபதி மகாதேவன் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

Next Story