தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது


தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 7 Aug 2018 12:05 PM GMT (Updated: 7 Aug 2018 12:05 PM GMT)

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் காவேரி மருத்துவமனைக்கு திமுக தொண்டர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கோபாலபுரத்தில் கருணாநிதி இல்லம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story