கருணாநிதி பங்கேற்ற கடைசி விழா


கருணாநிதி பங்கேற்ற கடைசி விழா
x
தினத்தந்தி 8 Aug 2018 7:24 AM GMT (Updated: 8 Aug 2018 7:24 AM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடைசியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்று பேசினார்.

வழக்கமான விழாக்களில் அவர் பேசுவதைவிட, இந்த விழாவில் கருணாநிதி சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார். ‘நான் பங்கேற்கும் கடைசி விழா இதுதான்’ என்று அவர் முன்கூட்டியே அறிந்திருந்தார் போலும்.

அந்த விழாவில் பேசிய கருணாநிதி, சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கையில், “நாளைக்கு என்னவாகும் என்று கேட்கிறார்கள். நாளைக்கும் இன்றுபோலவே இருக்கும். நான் இல்லாது போனாலும்கூட இந்த இயக்கத்தை அசைக்க முடியாது. கட்சிக்கு என்ன செய்ய வேண்டுமோ?, என்ன பணியை செய்ய வேண்டுமோ? அதை செய்துவிட்டுத்தான் போவேன். யாரும் நம்மை வீழ்த்த முடியாது என்ற அளவுக்கு பணியாற்றுவோம். என்னால் எந்த அளவுக்கு முடியுமோ? அந்த அளவுக்கு உங்களுக்காக உழைப்பேன். நான் உங்களுக்கு வேலைக்காரன். உங்களின் அன்புக்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்டவன்” என்று தழுதழுத்த குரலில் உருக்கமாக பேசினார்.

அதுவே, கருணாநிதியின் கடைசி பேச்சாகவும் அமைந்துவிட்டது. 

Next Story