நேற்று மாலை இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ! விஜயகாந்த் கவிதை அஞ்சலி


நேற்று மாலை இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ! விஜயகாந்த் கவிதை அஞ்சலி
x
தினத்தந்தி 9 Aug 2018 12:53 PM IST (Updated: 9 Aug 2018 12:53 PM IST)
t-max-icont-min-icon

திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கவிதை அஞ்சலி செலுத்தி உள்ளார். #Vijayakanth |#Karunanidhi

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முப்படை அணிவகுப்புடனும் அடக்கம் செய்யப்பட்டது. 

இந்தநிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள கவிதை அஞ்சலியில் கூறியிருப்பதாவது:

டாக்டர் கலைஞர் அவர்களுக்கு,

உலகமே உங்களை கலைஞரே ! என்று அழைத்தாலும் உணர்வுப்பூர்வமாக உங்களை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து உங்களுடன் பழகிய அந்த நாட்களை எண்ணி வியக்கிறேன். விம்முகிறேன், தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு! என்பதன் அர்த்தத்தை ‘உழைப்பு’ என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே!

அந்தி சாயும் பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை. ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணி அளவில் இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ! என்று என்னும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே!

உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் எங்களுடனேயே இருக்கும் உங்களை வணங்குகிறேன்.

உங்களின் நினைவாக என்றென்றும்...

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!

என்றும் உங்களுடன் இப்படிக்கு உங்கள் விஜி என்னும் விஜயகாந்த் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Next Story